• வாழ்க்கையின் ரகசியம்

    * உடல், மனம், அறிவு மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள்.
    * வஞ்சனையால் எதையும் உலகில் சாதிக்க இயலாது. அன்பும் உண்மையும் இருந்தால் பெரிய செயலைக் கூட எளிதாக செய்து விடலாம்.
    * இந்த பரந்த உலகில் பிறந்திருக்கும் நீங்கள், அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கும் சிறு கல்லுக்கும் கூட வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
    * பயமின்மையே வாழ்க்கையின் ரகசியம். பிறரிடம் இருந்து வரும் உதவியை ஏற்க மறுக்கின்ற அந்த கணமே நமக்கு சுதந்திரம் கிடைத்து விடும்.
    * நியாயமான கோபம் என்ற ஒன்று எங்கும் கிடையாது. ஏனெனில், அனைத்தையும் சமமாகக் காணத் தவறுவதால் தான் ஒருவருக்கு கோபமே உண்டாகிறது.
    * எண்ணங்களுக்கு நாம் உரிமை உடையவர்கள். நல்ல எண்ணங்கள் நம்மை நோக்கி வருவதற்காக உள்ளங்களைத் திறந்து வைக்க வேண்டியது நம் கடமை.
    - விவேகானந்தர்

0 comments:

Post a Comment