• உண்மையான மகிழ்ச்சி



    * உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக 
    நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
    * அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
    * தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை 
    மகிழ்விக்க முடியாது. 
    * கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது 
    செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான். 
    * மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை 
    தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான். 
    * கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் 
    அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி 
    சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

    -விவேகானந்தர்

0 comments:

Post a Comment