• உள்ளம் சொல்வதைக் கேள்!

    * கடவுளை அவருடைய அருளால் பார்க்க முடியும். கடவுள் நமக்கு அருகில் இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார்.
    * உயர்ந்த மனநிலைக்கு ஒருவனை அழைத்துச் செல்வது அறிவாற்றலே. அப்போது இதயம் தெய்வீக நிலையை அடைகிறது.
    * பண்புடையவர்களிடம் நம்பிக்கை, நேர்மை, பக்தி ஆகிய குணங்கள் தானாகவே வந்துவிடும். இந்த குணங்கள் உள்ளவர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழ்வதில்லை.
    * உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் பெற்றுள்ள ஒருவனை, உலகமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு. அவன் எதிலும் வெற்றி பெறுவான்.
    * அறிவு, உள்ளம் இவ்விரண்டில் எதைப்பின்பற்றுவது என மனதில் போராட்டம் எழும் போது, உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள். உள்ளமே மனிதனின் கண்ணாடியாக இருக்கிறது.
    - விவேகானந்தர்

0 comments:

Post a Comment