• விசாலமான மனம் வேண்டும்

    * பிரார்த்தனை என்பது நமக்குத் தேவையான உலக நன்மைகளைத் தருவது. அதனால் அதனைக் கற்றுக் கொள்ளுங்கள்.
    * உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, நமது உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டி விடப்படுகிறது.
    * இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியும், அதை முறைப்படி செலுத்துவதற்காக நாம் மேற்கொள்ளும் விரதங்களும் தான் நம்மைத் தூய்மைப்படுத்துகின்றன.
    * பக்தி என்றாலே சந்நியாசியாகிவிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உலகை விசாலமான மனதுடன் பார்த்தாலே போதும்.
    * மந்திரங்களின் மூலம் இயற்கையைப் புரிந்து கொண்டு, அதன்மூலம் நல்ல பலன்களை அடையும் பலத்தை மனத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    * ஒரு செயலில் மனதார ஈடுபடுங்கள். அவ்வாறான ஈடுபாடு இல்லையென்றால், சலிப்பும் சோர்வுமே உண்டாகும்.
    * உங்கள் சிந்தனையை உடலுடன் இணைத்து உழைக்க வைத்துவிட்டால், எந்தச் செயலிலும் சுறுசுறுப்பும் திருப்தியுமே ஏற்பட்டுவிடும்.
    - சின்மயானந்தர் 

0 comments:

Post a Comment