• கடவுள் நமக்கு உறவினர்

    * ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட, இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம் 
    செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்கு 
    சமமாகும்.
    * இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை 
    எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத் 
    தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும். 
    * இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும், 
    நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது. 
    * இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை 
    நாமத்தைக் கணக்கிட்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத் 
    தந்துள்ளான்.
    * கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை 
    நெருங்குகிறான். 
    - சாரதாதேவியார் 

0 comments:

Post a Comment