• விருப்பங்கள் நிறைவேறும்


    * அனைத்திலும் இறைவனை காண்பது 
    நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும் 
    ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
    * வாழும் காலம் எவ்வளவு 
    வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய 
    உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
    * இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும் 
    வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை 
    அனுபவிக்கிறான்.
    * நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் 
    மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது. 
    அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு 
    வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
    * பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். 
    -விவேகானந்தர் 

0 comments:

Post a Comment