• பொறுமைக்கு பெரிய பரிசு



    * நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உன்னிடம் இருக்கும் வரை அனைத்து செயலும் முன்னேற்றமடையும். இறைவன் அருளால் அபாயம் எதுவும் ஏற்படாது.
    * பூமி மாதாவை போன்று அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.
    * நன்மைகளைப் பெற வேண்டுமானால், வாழும் தெய்வமாகிய ஒவ்வொரு மனிதனையும் வழிபடுங்கள்.
    * ஏழைக்கு உதவி செய்வது என்பது, கோயிலில் சிவனை கண்டு வணங்குபவனிடம் சிவன் அடையும் மகிழ்ச்சியை விட மேலானதாகும்.
    * கடவுள் வரம்பு கடந்த பெருமைகளை உடையவர். அவரை வணங்கி துய்மையான மனதைப் பெறலாம்.
    * இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரையே எப்போதும் சார்ந்து நில்லுங்கள்.
    * கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே. நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்தில் ஒருவன் கேட்டால், கடைசிப் பருக்கையையும் கொடுத்துவிடு. அப்போது, நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் ஆவாய்.
    - விவேகானந்தர் 

0 comments:

Post a Comment