• பாதுகாப்பாள் பராசக்தி

    * நம் உடல் சுத்தமாக, தண்ணீரில்  குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த 
    புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.
    * பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் "அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை  நீக்குவாள் என்ற நம்பிக்கையே.
    * சஞ்சலமாகிய சேற்றிலிருந்து எழவேண்டும் என்றால், கரையில் இருக்கும் ஈஸ்வரன் என்ற கெட்டியான 
    பொருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
    * மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம். இவற்றால் நல்ல செயல்கள் செய்ய 
    பழகிக் கொள்ள வேண்டும்.
    * அன்பு தான் அழகு, காருண்யம் தான் லாவண்யம்.  ஒரு நாள் ஜுரம் அடித்தால், சிறிது கோபதாபம் வந்தால் முகத்தின் அழகு போய்விடுகிறது. ஆனால், அம்பாளின் அருளைப் பெற்றால் அதன் அழகு மறையாமல்  நிற்கிறது.
    - காஞ்சிப்பெரியவர் 

0 comments:

Post a Comment