• யாராயினும் ஆசை வேண்டாம்



    * ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம். இல்லாவிட்டால் செயல்கள் பிழையாகி கெட்டதை வளர்க்கும்.
    * குறைச்சலான வசதியைக் கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவுவதுதான் தியாகம், தர்மம், புண்ணியம்.
    * அன்பு எல்லாரிடமும், பொறுமை தவறு செய்கிறவனிடமும், பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்தில் இருக்கிறவனிடமும் கொண்டிருக்க வேண்டும்.
    * பொருளைத் திருடிப் பெறக்கூடாது. இன்னொருவனை வஞ்சித்துப் பெறக்கூடாது. லஞ்சம் வாங்கக்கூடாது. இன்னொருவன் வயிற்றில் அடிக்கக்கூடாது.
    * ரதி சுகம் தர்ம பத்தினியுடன் அனுபவிக்கலாமாயினும் நிஷேத தினங்களில் (சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட நாட்களில்) கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பிற பெண்களை மனதாலும் நினைக்கக்கூடாது.
    * குடிமக்கள் செய்யும் பாவம் அரசனையும், மனைவி செய்யும் பாவம் கணவனையும், சிஷ்யனின் பாவம் குருவையும் சேரும்.
    * யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.
    * தனக்கென்று பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால் உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.
    * இதற்கு மேல் ஒன்று வேண்டும் என்று தோன்றச் செய்யாத நிலைத்த பேரின்பமே 'மோட்சம்'.
    * தன் மனைவியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் புருஷனுக்கு கவுரவம்.
    -காஞ்சிப்பெரியவர்

0 comments:

Post a Comment